Tuesday, 21st May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருச்சி :திருச்சி அணைக்கும் கரங்கள் முதியோர் இல்லத்தில் உள்ள முதியோர்கள் பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடினர். அணைக்கும் கரங்கள் முதியோர் இல்லம் திருச்சி, மேட்டுப்பாளையம், பெரம்பலூர், கரூர் உள்ளிட்ட இடங்களில் செயல்பட்டு வருகிறது.
இந்த முதியோர் இல்லத்தை அதன் தலைவர் செந்தில் குமார் மற்றும் துணைத்தலைவர் டாக்டர் கார்த்திகேயன் ஆகியோர் செயல்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் தமிழர் பண்டிகையான பொங்கல் பண்டிகையையொட்டி பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
திருச்சி கேகே நகர் வயர்லெஸ் சாலையில் உள்ள அணைக்கும் கரங்கள் முதியோர் இல்லத்தில் கரும்பு உள்ளிட்டவற்றைக்கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் புதுப்பானையில் முதியவர்கள் பொங்கலிட்டு பொங்கல் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர்.
விழாவில் அணைக்கும் கரங்கள் முதியோர் இல்லத்தின் தலைவரும் நிறுவனருமான செந்தில் குமார் கல்ந்துகொண்டு அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார். விழாவிற்கான ஏற்பாடுகளை அணைக்கும் கரங்கள் முதியோர் இல்லத்தின் நிர்வாகிகள் செய்திருந்தனர்.